Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்றினை 2011ஆம் ஆண்டில் அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்பட்டு வருகின்றது. இத்திட்டத்துக்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலனறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை, தம்புள்ள உட்பட பல மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தழிழ் மக்கள் பேரவையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வத் திட்ட முன் வரைவு கருத்தரிவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் திருகோணமலையின் சனத்தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகள் தொழில்நுட்ப நிலையங்கள் முதலியனவற்றுக்கு தெற்கில் இருந்து சிங்கள் மக்களை குடியேற்றி திருகோணமலையின் துறைமுகத்தை மையமாக வைத்து பல அபிவிருத்தி திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் அமைத்து தழிழர்களை அரிதாக்கும் திட்டம் அது.
அவ்வாறான திட்டங்களை தடுக்கக் கூடிய தீர்வுகளை நாம் முன் வைக்கவேண்டும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தை வகிக்கும் இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய இந்த மாவட்டத்தின் இவ்வாறான நிலையை நாம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன் வரைவு தொடர்பாக விளக்கமளித்த சட்டத்தரணி காண்டீபன் கருத்து தெரிவிக்கையில்,
இனப் படுகொலை செய்யப்பட்டதை ஜ.நா.வில் நிபுணர் மாட்டி அடிசாகி, நிருபித்தமையாலேயே கோசோவா நாட்டுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே இன்று நாம் கோரும் சமஸ்டி தீர்வுக்கு கட்டாயும் இனப் படுகொலை நீருபிக்கப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
07 Jun 2025