Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சம்பூர் மக்கள் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் துணிகரமாக வாழ்ந்தவர்கள். பின்னர் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களினால், அவர்கள் துன்பங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய பேச்சும் செயலும் கவிதையும், கலாபூஷணம், கவிக்குயிலன் சிவஸ்ரீ அ.அரசரத்தினம் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை நகரசபையின் நூலகக்; கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (28) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாற கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டும். இனிமேல் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குரல் கொடுத்து வருகின்றார். தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றங்கள் இடம்பெறுகின்றபோதிலும், அது துரிதப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் கு.குணநாதன், திருகோணமலை நகரசபையின் முன்னால் தவிசாளர் க.செல்வராசா உட்பட கலைஞர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
sounthararajan Thursday, 29 October 2015 06:50 PM
சம்பூர் மக்கள் துணிகரமாக வாழ்ந்தவர்கள். பின்னர் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களினால், அவர்கள் துன்பங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். ஏன் ஸ்ரீலங்காவின் முற்படையினராலும் தாக்கப்பட்டு வெளியேற்றபட்டார்கள் இதை சொல்ல என்னதயக்கம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago