Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்,முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 இலட்சம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் 36 வயதுடைய ஒருவரை இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துஷித்த தம்மிக்க, ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டார்.
கருவாட்டு வியாபாரம் செய்வதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சந்தேக நபர் வாங்கியுள்ளார். இதன் பின்னர் 50 ஆயிரம் ரூபாயை திரும்பிக்கொடுத்துள்ளார். மீதி 2 இலட்சம் ரூபாயை பின்னர் தருவதாகக் கூறி சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் பணத்தை வழங்கியவர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், சந்தேக நபரை நண்பர் ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை (12) இரவு கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .