2025 மே 21, புதன்கிழமை

'புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 400 பேர் உள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளனர். இவர்களில்; பட்டணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 95 பேர் உள்ளதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ளவர்களின் சமூக, பொருளாதார, நலன்புரி தொடர்பில் ஆராயும் வகையிலான கலந்துரையாடல், பட்டணமும்சூழலும் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவர்களுக்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தொழில் வாய்ப்புகளையும் தொழில் பயிற்சிகளையும்  பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .