2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

'பிரதமரின் கூற்று பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

வடமாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க> போர்காலத்தில் காணாமற்போன உறவுகள் சிலர் உயிருடன் இருப்பதற்கு இல்லை. இவர்கள் இறந்துவிட்டனர் என்ற தகவல் காணாமற்போன உறவுகளின் குடும்பத்துக்கு இடிமேல் இடிவிழுந்து பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட கடத்தப்பட்டு காணாமற் ஆக்கப்பட்ட குடும்பத்தின் உறவுகளின் சங்கம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதமரின் வெளிப்படையாக கூறிய இந்த தகவல் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை, விடயங்கள், தடயங்கள் என்பன எம் நாட்டு பிரதமருக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வழி முறை உள்ளது என்பதை தெட்டத்தெளிவாக எமக்கு தெரிகின்றது.

எமது உறவுகளின் உயிர்கள் களவாடப்பட்டு உயிஜருடன் இருப்பதாக இல்லை என்றால் இந்த விடயம் சாத்தியமானதாக உள்ளதா? இவர்களுக்கு என்ன நடந்தது? இந்த விடயத்தில் இவருக்கும் பங்கு உண்டா? எப்படி பிரதமர் காணாமற் ஆக்கப்பட்ட உறவுகள் சிலர் உயிருடன் இல்லை என்பதை தமிழ் மக்களின் பண்டிகையில் பகிரங்தாக வெளிப்படுத்துவர்? ஆதாரங்கள் உள்ளதா? மக்களின் பல கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? நாட்டில் பிரதமரே இப்படியான செய்தியை கூறினால் எம் நிலைதான் என்ன? இதுதானா நல்லாட்சி? நல்லிணக்கம்?

எப்படி ஒரு நல்ல நாளில் இத்தகவல்களை மனம் வந்து வெளிப்படுத்தினாரோ எமது சங்க உறுப்பினரின் கேள்விக்கும் பதில் கூறவேண்டியவராவர். எனவே, எமது வேதனையை அதிகரித்த பிரதமரே எமக்கு பதில் தரவேண்டியவராக கட்டாயப்படுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

எமது காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் சிலர் உயிருடன் இல்லை என்று எப்படி கூறுவீர்கள்? அதற்கான ஆதாரங்களை எமக்கு வெளிப்படுத்த முடியுமா? எதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிவுகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது? அவர்களின் குடும்பத்தினரின் கண் துடைப்பக்காகவா? சித்திரவதை முகாம்களில் இருந்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்ன ஆனார்கள்? இதற்கான பதிலையும் பிரதமர் அவர்களே எமக்கு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .