2025 மே 19, திங்கட்கிழமை

'விண்ணப்ப விவகாரம்: கோரிக்கைக்கு சாதகமான பதில்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், எம். முபாரக்,எம்.எஸ்.எம்.ஹனீபா.எம்.எஸ்.எம்.நூர்தீன்.வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்காகக் கோரப்பட்ட விண்ணப்பத்தில், வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், தாம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளனவென, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், இன்று திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பட்டதாரிகளில் பலர், 35 வயதுக்கு மேற்படவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் வயதெல்லைக்கு ஏற்றால்போல் விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும்.

ஏனெறால், கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சரியான கல்வி கிடைக்காமை, இருப்பிட வசதி கிடைக்காமை, பாதுகாவலர்களின் இயலாமை, தாய், தந்தை மற்றும் உறவினர்களின் இழப்பு, பொருளாதாரம் மற்றும் இதர காரணங்களால், தமது கல்வி தாமதப்படுத்தப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் சிலர் காலம் கடந்து தமது பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

எனவே, அவர்களின் நலன்கருதி, அவர்களைப் புறந்தள்ளி விடாமல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது குறிப்பிட்ட மாணவர்களையும் உள்நுளைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென, நானும் மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியும் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கல்வி அமைச்சர் அகிலராஜ் காரியவசம் ஆகியோர் இதற்கு பச்சைக் கொடி காட்டியிருப்பது சந்தோசமளிக்கிறது.

ஆகவே, கடந்த வாரம் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பம் கோரப்பட்டமையில் குறிப்பிட்ட வயதெல்லையைத் தளர்த்தி அதில் மாற்றம் செய்ய தீர்மாணம் எடுகப்பட்டுள்ளது.

அதனால் இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X