Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் மூன்று இடங்களில் கேரள கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூவரை திருகோணமலை பிராந்திய, நச்சுத் தன்மையான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று (11) இரவு 6.00 மணியளவில் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 1.45 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தில் வைத்து, 26 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்தநபர் பொலிஸாரிடம் அளித்த தகவலின்படி, திருகோணமலை, அநுராதபுர சந்தியில் விற்பனை செய்து கொண்டிருந்த மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவன், 1,100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டான்.
இந்த இளைஞன் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்துக்கு இனங்க, திருகோணமலை, ரொட்டி லேன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 26 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 250 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் அடிப்படையிலேயே, சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்தளவு கஞ்சாவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபர்கள், திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago