2025 மே 14, புதன்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நலன்புரிச்சங்கம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு  கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் கல்வி உதவித் தொகையை இன்று செவ்வாய்க்கிழமை  காலை வழங்கி வைத்தது.

திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  மாணவர்களுக்கான உதவித் தொகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.  

32 மாணவர்களுக்கு  தலா 5,000.00 ரூபா வீதம் காசோலைகள் வழங்கப்பட்டன.  கனடாவை மையமாக கொண்டு இயங்கும் திருக்கோணமலை நலன்புரிச்சங்கம் இந்த நிதியுதவியை வழங்கியது.

திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவித்து உதவித் தொகை வழங்கப்பட்டது.  இந்த   நிகழ்வில் திருகோணமலை அகதிகள் நலன்புரிச் சங்கமும் வேறு 40 மாணவர்களுக்கு  உதவித் தொகையை  வழங்கி வைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X