2025 மே 03, சனிக்கிழமை

வெருகல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை சுனாமி ஒத்திகை

Super User   / 2012 மார்ச் 25 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

இலங்கை இராணுவம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு பிரிவு ஆகியவற்றின் அனுசரனையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுனாமி அபாயத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒத்திகை இடம்பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தெற்கே உள்ள வெருகல் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கரையோர கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் ஒருங்கிணைப்பார் எம்.எம்.எம்.முஹைஜீர் தெரிவித்தார்.

இது போன்ற சுனாமி ஒத்திகை நிகழ்வு இறுதியாக குச்சவெளி பிரதேச செயலாளர்  பிரிவிலுள்ள ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X