2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சேற்றில் புதையுண்டு ஒருவர் பலி

Super User   / 2012 ஜூலை 11 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

தம்பலகாமம், சிவத்த பாலம் எனும் இடத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் சேற்றில் புதையுண்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பணத்தைச் சேர்ந்தவர் 16 வயது நிறைந்த அருந்தவம் குமார் கைந்தன் எனத் தெரிவிக்ப்படுகின்றது. இவர் தனது உறவினரின் ஒரு வருட நினைவு வைபவத்திற்காக தம்பலகாமம் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .