2025 ஜூன் 28, சனிக்கிழமை

'ஐ.நா தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவு இருக்க வேண்டும்'

Super User   / 2012 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தலின் தமிழ் பேசும் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்பு அமைய வேண்டும் என தமிழ தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நகரின் புறநகர் பிரதேசமான பாலையூற்று - பூம்புகார் விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்திற்கிணங்க இலங்கை தனது கடமையை நிறைவேற்றியிருக்கின்றதா என்பது பற்றி வருகின்ற கார்த்திகை மாதம் மற்றும் 2013 மார்ச் மாதத்தில் மீண்டும் கூடி முக்கிய முடிவு எடுக்கவுள்ளது.

இத்தருணத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தலின் தமிழ் பேசும் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்பு அமைய வேண்டும். கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தவறிழைக்க கூடாது. அதிகார பகிர்வை எதிர்க்கும் ஆளும் கட்சியில் போட்டியிடும் தமிழர் ஒருவராவது வெற்றி பெறக்கூடாது.

வெற்றியீட்டும் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் உறுத்திப்படுத்த வேண்டும். தவறின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்திய உதவியுடன் விசேட பொருளாதர வலயம் ஒன்று திருகோணமலையில் அமைக்கப்படவிருப்பதாக கொழும்பு வந்திருக்கும் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவிததார். அவ்வாறு அமைக்கப்படும் பொருளாதார வலயம் கிழக்கு மாகாண சபை ஊடாக அமைக்கப்பட வேண்டும். அதற்கேற்ற விதமான ஆட்சி மற்றும் அதிகார பகிர்வு மாகாண சபைக்கு பகிர்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கேட்பதற்கான உரித்தும் உரிமையும் எமக்கு உண்டு. தற்போது மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்வு போதுமானதாக இல்லை. தமிழ் பேசும் மக்களுக்கு நீதி மற்றும் நியாயம் வழங்கப்படுவதை தொடர்ந்தும் முடிவில்லாமல் மறுத்து கொண்டிருக்க முடியாது.

அவ்வாறு மறுக்கப்படுவதற்கும் ஒரு முடிவு காணப்பட்டேயாக வேண்டும். அதற்கான காலமும் நேரமும் வந்துவிட்டது என்பதை தமிழ் பேசும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .