2025 ஜூன் 28, சனிக்கிழமை

கருமலையூற்று பள்ளிவாசலை மீண்டும் திறந்து பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எம்.பரீட்)


கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்புத் தரப்பினரால் மூடப்பட்டிருந்த திருமலை வெள்ளைமணல், கருமலையூற்று பள்ளிவாசலை  மீண்டும் திறந்து  பொதுமக்களிடம் கையளிப்பதற்கு முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான நஜீப் ஏ.மஜீத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் குழுவின் தலைவரும் சுற்றாடல்த்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட குழுவினருடன் நேற்று சனிக்கிழமை நஜீப் ஏ.மஜீத்;தின் தலைமையில் அவரது இல்லத்தில் கலந்ரையாடல் நடைபெற்றது. இதன்போது கருமலையூற்று பள்ளிவாசலை மீண்டும் திறப்பது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ.மஜீத், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குழுவினர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்புகொண்டு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக இப்பள்ளிவாசலை பொதுமக்களுக்கு கையளிப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், திருமலை மாவட்ட கிழக்கு மாகாணசபை வேட்பாளர் ஆதம்பாவா தௌபீக், குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் மாநகரசபை உறுப்பினருமான அப்துல் சத்தார், மாத்தளை மாநகரசபை தவிசாளர் ஹில்மி கரீம் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேற்று  மாலை கருமலையூற்று கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 22ஆவது படையணி திருமலை மாவட்ட பொறுப்பதிகாரி பிரிகேடியர் விஜேரட்னவின் அனுமதியுடன் இக்குழுவினர் பள்ளிவாசலை சென்று பார்வையிட்டனர்.

வட,கிழக்கு யுத்தம் காரணமாக இந்தக் கிராம மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நஜீப் ஏ.மஜீத்,  கருமலையூற்று கிராம மக்களை மீண்டும் குடியேற்றி கருமலையூற்று பள்ளிவாசலை பத்து இலட்சம் ரூபா செலவில்  புனரமைத்து கிராம மக்களுக்கு கையளித்திருந்தார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இராணுவத்தின் 22ஆவது படையணியினர் இப்பள்ளிவாசலை உட்படுத்தி முகாம் அமைத்திருந்தனர். பள்ளிவாசலுக்கு கிராம மக்கள் செல்வதும் தடைப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • rima Sunday, 12 August 2012 11:48 AM

    இப்ப தானா கண் துறந்துள்ளது இவ்வளவு நாளும் எங்க போனீர்கள்?

    Reply : 0       0

    rasmi Monday, 13 August 2012 12:58 AM

    இப்ப எலக்சென் தானே ஆஹே வருவாங்க‌

    Reply : 0       0

    jawhar Monday, 13 August 2012 04:52 PM

    எது செய்தாலும் தலைவா நீங்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் ஏச்சும் பேச்சும் உங்களுக்குத்தான். அசராமல் உங்கள் கடமை தொடருங்கள்.

    Reply : 0       0

    yoou Wednesday, 22 August 2012 04:56 AM

    இப்பதான் ஞாபகம் வந்ததா........எலக்சன் வராட்டி .......இது தெரியா.....

    Reply : 0       0

    S.Sinasudeen Friday, 24 August 2012 04:55 AM

    இப்பதானா கண் திறந்துள்ளது? இவ்வளவு நாளும் எங்க போனீர்கள்? இப்ப எலக்சென் தானே... ஆஹா... வருவாங்க‌
    எல்லாம் இறைவன் செயல்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .