2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வடக்கு அதிகாரிகளினால் கிழக்கு மாகாண சபையில் சலசலப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகளினால் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடைவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் காலை 9.40 க்கு  ஆரம்பமானது. கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வினை பார்வையிடுவதற்காக வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதிகப்பட்டனர். இவர்கள் சபை நடவடிக்கைகளை அவைக்குள் அமர்ந்தே பார்வையிட்டனர்.

இதனையடுத்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் ஜயந்த விஜயசேகர இந்த செயற்பாடு சட்டத்துக்கு முரணானது என அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் ஆளும், எதிர் தரப்பு உறுப்பினர்களிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றது.

இதனையடுத்து சபை அமர்வை 10 நிடங்களுக்கு தவிசாளர் ஒத்திவைத்தார். ஆளும் தரப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. சபையினுள் அமர்ந்திருந்த வட மாகாண சபையின் உயர் அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு பார்வையாளர் கலரியிலிருந்து சபை நடவடிக்கையை அவதானிப்பதற்கு இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள்  கிழக்கு மாகாண சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் கலரியிலிருந்தே அவை நடவடிக்கையை பார்வையிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .