2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பதுமன் விடுதலை

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அமதுரூ அமரஜீவ

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர்  பதுமன் என்று அழைக்கப்படும்; சிவசுப்ரமணியம் வரதநாதன் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ முகாம்களை தாக்கியமை, இராணுவத்தினரை தாக்கி கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ராஜ் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க பாலம்பட்டார் பகுதி தலைவராக இருந்த காலத்தில் தாக்குதல்களை நடத்தினார் எனவும் கொலைகள் செய்தார் எனவும் இவர் மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.

குற்றம் சுமத்தப்பட்டடிவரின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே அவருக்கு எதிராக வைக்கப்பட்ட சான்றாக இருந்தது. இதிலும் பல குறைகள் உள்ளதை கருத்திற்கு கொண்டு நீதிமன்றம் விடுதலை இவரை விடுதலை செய்துள்ளது.  பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .