2025 ஜூன் 25, புதன்கிழமை

கிளிவெட்டி பிரதேசத்தில் புகுந்த யானைகள்: அரிசி ஆலை சேதம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி பிரதேசத்தில்   வெள்ளிக்கிழமை(12) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், அரிசி மில் ஆலையை சேதப்படுத்தியுள்ளதுடன் கிளிவெட்டி பாம் வீதியில் உள்ள தென்னை மரங்கள், மரவள்ளி தோட்டம் என்பவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிவெட்டி முதலாம் வட்டாரத்தில் வசிக்கும் சிவபிரகாசம் தெய்வேந்திரன் வயது 65 அவருடைய அரிசி மில் ஆலையை யானை துவம்சம் செய்துள்ளது. 

கிளிவெட்டி பிரதான வீதிக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதால்தான் காட்டுயானைகள் ஊருக்குள் பிரவேசிப்பதாக கிளிவெட்டி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .