2025 ஜூன் 25, புதன்கிழமை

அரிசி மலை விவகாரம்: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உட்பட நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

பொலிஸாரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் றம்ழான் அன்வர், குச்சவெளி பிரதேச  சபை  உப தலைவர் ஆதம்பாவா தௌபீக்,  புல்மோட்டை பெரிய பள்ளிவாசல் தலைவர் கலில் லெப்பை  மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஒன்றியத் தலைவர் ஐயூப்கான் ஆகியோருக்கு எதிராக  புல்மோட்டை பொலிஸார், குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் புதன்கிழமை (27) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த  செவ்வாய்க்கிழமை (26)  அரிசிமலை பகுதியில் நில அளவை செய்ய வந்த  நில அளவைத்திணக்கள அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதேச  மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன்போதே இந்நால்வரும் சம்பவ இடத்தில் இருந்து தமது கடமைக்கு குந்தகம் விளைவித்ததாக  பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

 குறித்த நால்வருக்கும் நேற்று புதன்கிழமை (27) பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டு KU/BR/234/14 என்ற இலக்கத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .