2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிளோட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். கீதபொன்கலன்

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை வெள்ளிக்கிழமை (05) வந்தடையவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகிய தொடர் சைக்கிளோட்டம் சிலாபம் சென்று அங்கிருந்து அனுராதபுரம் ஊடாக கிளிநொச்சி சென்று அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டு யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளது.

யாழ்.நகரில் இருந்து முல்லைத்தீவுக்கு நாளை செல்லும் துவிச்சக்கர வண்டியோட்ட வீரர்கள், முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு திருகோணமலையை வெள்ளிக்கிழமை வந்தடையவுள்ளனர்.

தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் nஐத்தா தேவபுர என்பரை தலைவராக கொண்ட தன்னார்வ தொண்டர் நிறுவனமே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது.

தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிசிசி 1333 (ccc1333) என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.
இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான பேரந்து தரிப்பு நிலையத்துக்;கு முன்பாக தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் தெருக்கூத்து ஒன்று நடாத்தப்படவுள்ளது.

அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாகவும், 1333 என்ற தொலைபேசி இலக்கம் கொண்ட ஸ்டிக்கர்கள், கைச்சங்கிலிகள், கோப்பைகள் என்பவற்றை பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, 6ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலையில் இருந்து புறப்படும் வண்டியோட்டம் மட்டக்களப்புக்கு செல்லும் என்றும் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு 7ஆம் திகதி  அறுகம்பயை அடையவுள்ளது.

பின்னர் 8ஆம் திகதி மொனராகலைக்கும் 9ஆம் திகதி அம்பாந்தோட்டைக்கும் செல்லுமென்றும் 10ஆம் திகதி காலிக்கு சென்று 11ஆம் திகதி பெந்தோட்டையை அடையவுள்ளதுடன் அங்கிருந்து 12ஆம் திகதி மீண்டும் கொழும்பு சென்றடையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த 12 மாவட்டங்களுக்கிடையிலான தொடர் துவிச்சக்கரவண்டியோட்டம் மொத்தம் 1333 கிலோ மீற்றர்களை கொண்டதாக அமையவுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இவ் விசேட செயற்றிட்டத்தின் விசேட தூதுவராக செயற்படுவதுடன், இவ் செயற்றிட்டம் தொடர்பான தமது கருத்துக்களையும் தொடர்பூடகங்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .