2025 ஜூன் 25, புதன்கிழமை

புற்றுநோய் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு

George   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்.கீதபொன்கலன்


புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாக, திருகோணமலை ரோட்டறிக்கழகம், மித்துருவெல புற்றுநோய் ஆதரவு இணையத்துடன் இணைந்து திருகோணமலை றொட்டவெ, கோமரங்கடவெல பிரதேசங்களில் சனிக்கிழமை விளக்கமளிக்கும் செயலமர்வை நடாத்தியது.

செயலமர்வில், விளக்கவுரைகளை மித்துருவெல புற்றுநோய் ஆதரவு இணையத்தின் தலைவர் மருத்துவர்.எஸ்.தளையசிங்கம் மற்றும் இணையத்தின் செயற்பாட்டாளர்களாகிய மருத்துவர் அநுர ஏக்கநாயக்க, மருத்துவர் சப்புமல் ஆகியோர் வழங்கினர்.

இச்செயலமர்விற்கான அனுசரணை ஏற்பாடுகளை கோமரங்கடவெல பிரதேச செயலாளரும், பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியும் மேற்கொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .