2025 ஜூன் 25, புதன்கிழமை

தேசிய சிறைக் கைதிகள் தின கொடி விநியோக நிகழ்வு

Super User   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - ஏ.எம்.ஏ.பரீத்


தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு திருக்கோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதி  கொடி விநியோகம் புதன்கிழமை (10) திருக்கோணமலை உதவிச் சிறைச்சாலை அத்தியட்சகர் யு.ஜி.டபில்யு.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு முதற்கொடியினை சிறைச்சாலை அதிகாரி அனுவித்தார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சு.ஆ.ரம்ழான், சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் கொடி அனுவிக்கப்பட்டது.

இவ்வாறு கொடி மூலம் சேகரிக்கப்படும் நிதி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்டவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலையின் குறை நிறைகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு சிறைச்சாலை அதிகாரி கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .