2025 ஜூன் 25, புதன்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

தேசிய நிர்மானிகள் சங்க, திருகோணமலை கிளையின் 13ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (13) மாலை நடைபெற்றது.

அலஸ்தோட்டம் சீ லோட்ஸ் பார்க் விடுதியில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.

தலைவராக அப்துல் மனாப் நசீர், செயலாளராக எஸ்.ஜெகதீசன். பொருளாளராக லால் அத்தநாயக்காவும் இவர்களுடன்  9 பேர் கொண்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்ப்பட்டனர்.

இக்கூட்டத்துக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்தபுஞ்சி நிலமே பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபயகுவர்த்தன கௌரவ விருந்தினராகவும் திருகோணமலை வீதி  அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியிலாளர் ரீ.மோகனதாஸ்விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தேசிய நிர்மானிகள் சங்கத்தின் தலைவர்  தேசமான்ய எஸ்.பி.லியனாராச்சி செயலாளர் ரஞ்சித் ஹேவஹேயும்; கலந்து கொண்டு விசேட உரையாற்றினார்கள்.

டோக்கியோ சீமெந்த நிறுவனம், அட்மோ நிறுவனம், அலமெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்த கொண்ட தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள், சேவைகள் பற்றி விளக்கமளித்தனர்;. இந்நிறுவனங்கள் இந்நிகழ்வுகான அனுசரணைகளையும் வழங்கி இருந்தன.

பொதுக்கூட்டத்தனை தொடர்ந்து சங்கத்தின் அனுபவங்களைப் பகிரும் நிகழ்வு இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .