2025 ஜூன் 25, புதன்கிழமை

கொடி வாரம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


மட்டக்களப்பு, 'தரிசனம்' விழிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த கொடி விற்பனை வாரத்தையொட்டி திருகோணமலை மாவட்டத்துக்கான முதல் கொடி விற்பனை திங்கட்கிழமை(15) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கொடி விற்பனை வாரமானது திங்கட்கிழமை(15) முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

கொடி வாரத்தையொட்டி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் கொடி விற்பனை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்ற ஒன்று கூடலில், தரிசனம் அமைப்பின் திருகோணமலைப் பிரதிநிதி சி.சில்வேந்திரன் தமது அமைப்பு பற்றி மாணவர்களுக்கு உரையாற்றியதுடன் கல்லூரியின் முதன்மை மாணவர் தலைவருக்கு கொடியை அணிவித்து கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .