2025 ஜூன் 25, புதன்கிழமை

உயிர்பல்வகைமை விழிப்புணர்வு செயலமர்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


 யானைகளை பாதுகாப்பதற்கும் உயிர்பல்வகைமை அமைவை பேணுவதற்குமான நம்பிகை நிதியத்தின்  ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் உயிர்பல்வகையின்  அமைவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயரமர்வு திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்  செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் வினோபா, இலங்கை திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி ஸ்ரீ கிருஸ்ணராஜா, நம்பிக்கை நிதியத்தின் நிர்வாகப்பணிப்பாளர் ஜெயந்த ஜெயவர்த்தன ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இக்கருத்தரங்கை, தெரிவு செய்யப்பட்ட 150 பாடசாலைகளில் தாம் நடாத்தவுள்ளதாகவும் இதுவரை 15 பாடசாலைகளில் இக்கருத்தரங்கு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளதென ஜெயந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.

இச்செயற்பாடானது கல்வியமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென அவர் மேலும்  தெரிவித்தார் .



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .