2025 ஜூன் 25, புதன்கிழமை

திருமலை அரசாங்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிகுமார்

திருகோணமலை மாவட்ட, அரசாங்க அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி, திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் திங்கட்கிழமை (29) திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற மேஜர் ஜெனர்ல் டி.டி.ஆர்.டி சில்வாவுக்கு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேச செயலாளர்களின் அரச கடமைகளை செய்வதற்கு, அரசாங்க அதிபர் தடையாக இருப்பதாகவும் அவரை உடனடியாக இடம்மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'அரசாங்க அதிபரை இடம்மாற்றம் செய்வதற்கான கடிதம் இம்மாதம் 15ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் அவருடைய பதவிக்கு வேறோருவரும் நியமிக்கப்பட்டார்.

இருந்தும், இடம்மாற்ற கடிதத்தை நிராகரித்துவிட்டு அரசாங்க அதிபர் சேவையில் ஈடுபட்டுள்ளார்' என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

'திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபரினுடைய கைபொம்மையாக இருக்கின்றார்' என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அரசாங்க அதிபரை இடம்மாற்றம் செய்யக்கூடாது என்று கோரி திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் மற்றுமொரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கந்தலாய் கோமரங்கடவல பிரதேசத்திலுமிருந்து பொதுமக்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .