2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சல்மானை அழைத்துவந்து மஹிந்த கும்மாளம் போடுகிறார்: மைத்திரி

Kogilavani   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.பரீட்

அரசியல் அதிகாரத்துக்காக சல்மான் கானை அழைத்து வந்து, ஜனாதிபதி மஹிந்த கும்மாளம் போடுகின்றார் என்று எதரிணியின் ஜனாதிபதி வேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, கிண்ணியாவில் திங்கட்கிழமை(29) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

700 மில்லியன் ரூபாய் செலவில், சல்மான் கானை அழைத்து வந்து அரசியல் களியாட்டம் காட்டும் கேவலாமான அரசியலை செய்யாது, வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலட்சக்காணக்கான மக்களுக்கு உதவி செய்யுமாறும் ஜனாதிபதிக்கு அறிவுறுத்துவதாக அவர் இதன்போது சாடியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அதிகார மோகம் அவரை ஆட்கொண்டுவிட்டது. கடந்த 10 வருடங்களாக அவருடைய நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கின்றது. மக்களுடைய துன்பத்தைப்பற்றி அவர்கள் துளியும் சிந்திக்கவில்லை. அரச பரம்பரையைப் போன்று வாழ்வதற்கே இன்னும் உங்களிடம் அதிகாரத்தைக் கேட்கின்றார். உங்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அவர், மக்கள் சேவகனாக இருப்பதற்கு தயாரில்லை.

இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் இவருடைய ஆட்சி வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜனவரி எட்டாம் திகதி இவரைத் துரத்துவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் போன்று ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தி வேலைகள் என்று கூறிக்கொண்டு 60 வீதமான பணத்தை தங்களுடைய பைகளிலே போட்டுக்கொண்டு சுகபோகங்களை அனுபவித்தார்கள்.

இந்த நாட்டினுடைய அரச சேவையைச் சீரழித்தார்கள். பொலிஸ் சேவையைச் சீரழித்தார்கள். முப்படையினரையும் ராஜபக்ஷ குடும்பத்தின் அடிமையாக்கிக் கொண்டார்கள். நாடாளுமன்றத்தை அதிகாரம் இழக்கச் செய்தார்கள்.

அமைச்சரவையை நாம நிர்வாகமாக மாற்றினார்கள். கட்சித் தலைவர்கள் கூறுகின்ற விடயங்களை அவர்கள் செவிமடுப்பதில்லை. வர்த்தகர்களைப் பயமுறுத்தி கப்பம் பெற்றார்கள். அரசியல்வாதிகள் ஊழல்களால் மலர்ந்து விட்டார்கள்.

ஓர் ஆட்சியாளன் ஏப்படி இருக்க வேண்டும் என்று அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எனைய சமயங்களிலும் நல்லாட்சி பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்த எந்தவொரு கருத்துக்களையும் ஏற்று நடந்ததாக சரித்தரம் இல்லை.

சமூர்த்தி பயனாளிகளை புறக்கனித்துட்டு இன்று அவர்களைத் தேடுகறார்கள். இவற்றுக்கு நீங்கள் ஏமாற வேண்டாம். நாளை மறுதினம் உங்களுக்காக கைக்கடிகாரங்கள், சாரிகள் என்பன கொள்களன்களில் கொண்டு வந்த இறக்கப்போகிறர்கள். அது உங்களுடைய சொத்து. அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மக்களுக்கு எனது அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். கிண்ணியாவின் பல கிராமங்களின் தரைவழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை நான் அறிந்தேன்.

பிரதானமாக வெள்ளத்தால் உடைப்பெடுத்த குறிஞ்சாக்கேணி பாலம் மற்றும் கச்சக்கொடிப் பாலம் ஆகியவற்றை நவீன முறையில் நிர்மாணப்பதே கிண்ணியாவில் எனது முதல் அபிவிருத்தி வேலையாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .