2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படு கொலையைக் கண்டித்து, திருகோணமலை நிலாவெளி கயிலேஸ்வரா கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதியில், இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள், 'அரசே! குற்றவாளிகளைத் தூக்கிலிடு', 'மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு', 'காமவெறியர்களே! மாணவர்களைச் சீண்டாதே' போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .