Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் இந்த தனியார் விருந்து சனிக்கிழமை (17) அன்று நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பெந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago