2026 மே 07, வியாழக்கிழமை

கம்பஹா ஊரடங்கில் மாற்றமில்லை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை, நாளை (25) காலை நீக்குவதுத் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியசாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். 

மூன்று தினங்களுக்கு மேல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை, நாளைய (25) தினம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .