2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

அரச மற்றும் மாகாண அரச சேவை ஊழியர்கள் போராட்டம்

Mayu   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநில மற்றும் மாகாண அரச சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் மொனராகலை பழைய கச்சேரிய சந்திக்கு அருகில் இன்றைய தினம்  (12) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து ஊழியர்களின் சம்பளம் அல்லது சம்பள உயர்வுக்கான குறைந்தபட்ச கொடுப்பனவான இருபதாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த  போராட்டம் ஜனவரி மாத சம்பளத்துடன் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை சேர்ப்பது, 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமையை மீட்டெடுப்பது, மற்றும் டபிள்யூ மற்றும் ஓபி நிதியில் 08% சம்பளத்தை குறைக்கும் முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமணசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X