Mayu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமிக்க சிலர் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான பீ.எம்.ரனீஸ் பதூர்தீன் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஐ.எம்.இல்யாஸ் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.



07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026