Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்காவல் பிரதேசத்தில் மணல் அகழ்ந்தெடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பாரிய குழிகளை உடனடியாக மூடுமாறு கோரி, பிரதேசவாசிகள், இன்று திங்கட்கிழமை (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செம்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, உடங்காவல் பிரதேசத்தில் தோண்டப்பட்டிருந்த 10 ஏக்கர் பரப்புடைய நீர் நிறைந்த குழியில் நீராடச் சென்ற தோப்பு ரோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 இல் பயிலும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து குறித்த குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பிரதேச மக்கள், அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago