2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

செப்டெம்பர் 20-இல் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் 2,787 நிலையங்களில் இவ்வாண்டு பரீட்சை நடைபெற்றதாகவும், 307,951 பேர் பரீட்சைக்குத் தோற்றியதாக இந்திக குமாரி லியனகே ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X