Princiya Dixci / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (07) போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
“இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும்”, “எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம்”, “லோன் லீசிங் செலுத்த முடியாது; நிவாரணம் வழங்கு” மற்றும் “74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் பிரதான வீதி வரை பேரணியாக வந்து தங்களது ஆதங்கங்களையும் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களையும் சட்டத்தரணிகள் எழுப்பினர்.
(படங்கள் – ஹஸ்பர்)


8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026