R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோயில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.
சமூக தரிசன நிறுவனமும் சக்தி சன சமூக நிலையமும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து ஞாயிற்றுக்கிழமை(15)அன்று நடத்தினர் . இந் நிகழ்வில் திருக்கோயில் காயத்ரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் இனிப்பு என்பது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் எஸ்ஸ் வீ ஓ அமைப்பின் பிரதேச தலைவர் கே. பத்மநாதன் காயத்ரி கிராமத்தில் கிராம உத்தியோகத்தர் எஸ். ஷடாட்சரம் சிறப்பு அதிதியாக கண. இராஜரத்தினம் எஸ் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் ஊன்றுகோல் தேவையான முதியோர்களுக்கு ஊன்று கோல்கள் வழங்கப்பட்டன. மகிழ்ச்சி நிகழ்வாக மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி இந்த நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.





5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago