2025 மே 16, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam பிரதி உயர்ஸ்தானிகர் Mohammad Hazrat Ali Khan  ஆகியோர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பு விஜேராமையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நேற்று(02) இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துகளையும் அவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

 

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .