Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றிருக்காத நிலையில், அத்தொடரில் அவ்வணியின் அணித்தெரிவுகள் குறித்து, அவ்வணியின் முன்னாள் வீரரான ஷேன் வோண், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இத்தொடரில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோணர், மத்தியவரிசையில் களமிறக்கப்பட, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆரொன் பின்ச், முதல் 2 போட்டிகளுக்கும் அணியில் சேர்க்கப்படவில்லை. முன்பு, ஷேன் வொற்சனும் உஸ்மான் கவாஜாவும் பின்னர் ஆரொன் பின்ச்சும் உஸ்மான் கவாஜாவுமே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர்.
எனினும், அவ்வணியின் வழக்கமான ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான டேவிட் வோணர், ஆரொன் பின்ச் ஜோடியே களமிறங்கியிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், உஸ்மான் கவாஜா, மூன்றாமிலக்கத்தில் களமிறங்கியிருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சகலதுறை வீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ், அவுஸ்திரேலிய அணியில் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இறுதி நேரத்தில் பந்துவீசுவதற்கு, அவரே சிறந்தவர் எனவும் தெரிவித்தார்.
அணியில் மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், தெரிவுசெய்ய அணியொன்றை, தொடர்ந்தும் தெரிவுசெய்திருக்க வேண்டுமே தவிர, அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago