2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியில் டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 06 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.

டொட்டென்ஹாமின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிறன்போர்ட்டுக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்க்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் தகுதிபெற்றுள்ளது.

டொட்டென்ஹாம் சார்பாக, மூஸா சிஸாகோ, சண் ஹெயுங்க்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X