Shanmugan Murugavel / 2016 ஜூன் 28 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு, தனது முதலாவது தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ள மிக்கி ஆர்தர், தனது கடந்தகால சர்ச்சைக்குரிய பாணியை, இன்னமும் மாற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக இருந்த மிக்கி ஆர்தர், வீட்டுப் பாடம் செய்யாமையால் 4 வீரர்களை இடைநிறுத்தியமை உட்பட, அவுஸ்திரேலிய அணியில் அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. அப்பதவியிலிருந்து அவர், நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ள அவர், அவுஸ்திரேலியப் பயிற்றுநர் பதவியிலிருந்து, ஆஷஸ் தொடருக்கு 2 வாரங்கள் இருக்கையில் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.
"நீங்கள் சென்று, அதைப் பற்றி ஆராய்ந்து, அதுபற்றிச் சிந்திப்பீர்கள். அந்த அனுபவத்திலிருந்து நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். ஆனால், எனது பாணியை நான் மாற்றவில்லை. ஏனென்றால், விழுமியங்களினதும் கொள்கைகளினதும் அடிப்படையில் பணியாற்றுவதற்குச் சிறந்த முறையென நீங்கள் எண்ணுவதை, நீங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலும் அவர், "வீட்டுப்பாட விவகாரம் தொடர்பாகக் கதைப்பதில் நான் களைப்படைந்து விட்டேன். அத்தோடு, அது ஊடகங்களில் அறிக்கையிடப்பட்ட விதம் குறித்தும் களைப்படைந்துள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
51 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago