Shanmugan Murugavel / 2021 ஜூன் 05 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்குகான இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணத்துக்காக தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்ட சுற்றுப்பயண ஒப்பந்தங்களை கையெழுத்திட மறுத்துள்ளனர்.
அந்தவகையில், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணமானது சந்தேகத்துக்கு உரியதாக மாறியுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு இங்கிலாந்துக்கு இலங்கை பயணமாகவுள்ளது.
சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து 38 வீரர்கள் அறிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
கையெழுத்திட மறுத்த வீரர்கள்: குஷல் பெரேரா, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், குஷல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், தசுன் ஷானக, வனிடு ஹஸரங்க, லசித் எம்புல்தெனிய, பதும் நிஸங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, லக்ஷன் சந்தகான், விஷ்வ பெர்ணான்டோ, இசுரு உதான, ஒஷாத பெர்ணான்டோ, ரமேஷ் மென்டிஸ், லஹிரு குமார, தனுஷ்க குணதிலக, அஷேன் பண்டார, அகில தனஞ்சய, சாமிக கருணாரத்ன, அசித பெர்ணான்டோ, பினுர பெர்ணான்டோ, ஷிரான் பெர்ணான்டோ, அவிஷ்க பெர்ணான்டோ, இஷான் ஜயரத்ன, சரித் அஸலங்க, தனஞ்சய லக்ஷன், நுவான் பிரதீப், சதீர சமரவிக்கிரம, கமில் மிஷார, பிரவீன் ஜெயவிக்கிரம, றொஷேன் சில்வா, மினோட் பானுக.
30 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
6 hours ago
6 hours ago