Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொஸ்கோ கவ்ரிகால் பெற்றதோடு, நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தனி கோர்டன் பெற்றார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, கப்ரியல் மார்டினெல்லி, லியன்ட்ரோ ட்ரொஸார்ட், கை ஹவேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜேம்ஸ் ஜஸ்டின் பெற்றார்.
16 minute ago
32 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
40 minute ago
1 hours ago