Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், லாகூரில் சனிக்கிழமை (22) நடைபெற்ற இங்கிலாந்துடனான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென தெரிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பென் டக்கெட்டின் 165 (143), ஜோ றூட்டின் 68 (78) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பென் டுவார்ஷுஸுஸ் 3, அடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 352 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஜொஷ் இங்லிஸின் ஆட்டமிழக்காமல் 120 (86), அலெக்ஸ் காரியின் 69 (63), மத்தியூ ஷோர்ட்டின் 63 (66), மர்னுஸ் லபுஷைனின் 47 (45), கிளென் மக்ஸ்வெல்லின் ஆட்டமிழக்காத 32 (15) ஓட்டங்களோடு 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் அடில் ரஷீட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இங்லிஸ் தெரிவானார்.
4 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago