2025 ஜூலை 02, புதன்கிழமை

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடர்: அகஸ்பேர்க்கிடம் தோற்றது டொட்டமுண்ட்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெலிஸ்கா தொடரில், அகஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது.

அகஸ்பேர்க் சார்பாக, உடுவோவாகய், டேனியல் கலிகியூரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்.இ லெய்ஸிக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை எமில் ஃபொர்ஸ்பேர்க் பெற்றிருந்ததுடன், பயேர் லெவர்குஸன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெரெம் டெமிரபி பெற்றிருந்தார்.

இதேவேளை, பொரூசியா மொச்சென்கிளெட்பாவின் மைதானத்தில் அவ்வணிக்கும் யூனியன் பெர்லினுக்குமிடையே நடைபெற்ற போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பொரூசியா மொச்சென்கிளெட்பா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் துராம் பெற்றதோடு, யூனியன் பேர்லின் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கோ ஸ்கொலெட்டர்பெக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஷல்கேயின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் வேர்டர் அணிக்குமிடையிலான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது. ஷல்கே சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் உத் பெற்றிருந்த நிலையில், வேர்டர் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் நிக்லஸ் புல்க்றூக் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .