Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், பாகிஸ்தானின் உள்ளூர்த் தொடரான பாகிஸ்தான் கிண்ணப் போட்டிகளில் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
அத்தொடரில் கைபெர் பக்துங்க்வா அணியின் தலைவராகச் செயற்பட்ட யுனிஸ் கான், நடுவர்களின் தீர்ப்புத் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டு, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போட்டி மத்தியஸ்தரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அதற்குச் சென்றிருக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. விசாரணைக்குச் சமுகமளிக்காததோடு, இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக யுனிஸ் கான் அறிவித்தார்.
இந்நிலையிலேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கானுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள யுனிஸ் கான், இடம்பெற்ற சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியதுடன், தொடர்ந்துவரும் போட்டிகளில் விளையாடும் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், அபராதத்துக்கு மேலதிகமாக அவர் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள், தொடர்ந்தும் இடம்பெறுமென அறிவிக்கப்படுகிறது.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago