Shanmugan Murugavel / 2024 ஜூன் 25 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குரோஷியா, இத்தாலிக்கிடையேயான குழு பி போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தமையையடுத்தே இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியா ஸக்கனி பெற்றதோடு, குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மோட்ரிச் பெற்றிருந்தார்.
இந்நிலையில் மற்றைய குழு பி போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னிடம் அல்பானியா தோற்ற நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்தும் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றன.
11 minute ago
33 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
35 minute ago
56 minute ago