Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக பதினொருவர் அணி பங்குபற்றும் கிரிக்கெட் போட்டிகளை, பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை, பாகிஸ்தானுக்கு மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போதுள்ள முயற்சி வெற்றிபெறுமாயின், இவ்வாண்டு இறுதியில், 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளை, பாகிஸ்தான் நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.
2009ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி பயணித்த பஸ் மீது, ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே, கிரிக்கெட் போட்டிகளுக்காக அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago