2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியது

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள்ப் போட்டித் தொடரை இலங்கை அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. முதற்ப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்த போதும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி சிறப்பாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 
 
தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி டக் வேர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. 48 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 32.1 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பவாட் அலாம் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இலங்கை அணிக்கு டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 101 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 26 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .