Editorial / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அறிவித்துள்ளமை மிகவும் தவறானதெனவும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்தச் செயற்பாடு, கல்வித்துறைக்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துமெனவும் ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்து, வெவ்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்களாகத் தொழில்புரிகின்றவர்கள் அனைவரும் தாங்களும் தங்களுடைய மாகாணத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்களேயானால் அதனை எவ்வாறு நடைமுறைபடுத்துவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த விடயத்தில் பல நிர்வாக ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் எனவே, இவ்விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர், திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago