2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

இருவரிடம் ரூ.28 இலட்சம் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

Janu   / 2023 ஜூலை 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கனடா, ஒமான் நாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட  கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

கனடாவிற்கு அனுப்புவதாக கொழும்பிலுள்ள போலி முகவர் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு அவரை கடந்த 6 மாதகாலமாக ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த போலி முகவருக்கு எதிராக விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து போலி முகவரை கொழும்பில் வைத்து   கைது செய்தனர்.

அதேவேளை ஓமான் நாட்டிற்கு வேலை பெற்று தருவதாக ஒருவரிடம் சின்ன ஊறணியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவர் 13 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய போலி முகவரை கைது செய்தனர்.

இந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டனர். வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக இருவரும் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X