Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வவுணத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (11) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதவி பரிசோதகரான சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வவுணதீவு பகுதியில் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தார்.
இதனையடுத்து அவரை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரிகை பொலிஸாரின் மரியாதையுடன் நாளை இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
4 hours ago