Freelancer / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘இலங்கை காப்போம்’ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கு, உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (14) குறித்த நிறுவனத்தின் மட்டிக்களி கூட்ட மண்டபத்தில்
நடைபெற்றது.
‘இலங்கை காப்போம்’ தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு. பிரதிப்கரன் (திலீப்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சித்த ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் மா. நிரஞ்சன் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது, செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்களின் 50 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. R
6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026