2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏறாவூர்க் கோட்டக்கல்வி அலுவலகம் இடமாற்றம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 16 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்டக்கல்வி அலுவலகம் மீராகேணி வாசிகசாலை கட்டடத்தொகுதியின் ஒருபகுதியில் புதன்கிழமை (15) முதல் செயற்படத் தொடங்கியுள்ளதாக அக்கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஹறூப் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் கடந்த சில வருடகாலமாக ஏறாவூர், அலிகார் தேசிய பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத்தொகுதியில் தற்காலிகமாக இயங்கிவந்தது. தற்போது கற்றல் நடவடிக்கைக்காக அவ்வகுப்பறைக் கட்டடம் மீள வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த அலுவலகம் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X